உள்ளூர் செய்திகள் (District)

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் அறிமுகம்

Published On 2023-05-20 08:55 GMT   |   Update On 2023-05-20 08:55 GMT
  • இந்த எந்திரத்தில் மொத்தம் 300 பைகள் இருப்பு வைக்க முடியும்.
  • ஒரிரு நாட்களில் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வர உள்ளது

கோவை,

தமிழக அரசின் சார்பில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் தட்டு, டம்ளர், பாலித்தீன் கவர்கள் உள்ளிட்ட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பைகளை தவிர்க்கும் வகையில் துணியால் தயாரிக்கப்பட்ட மஞ்சப்பை பயன்படுத்து வதை தமிழக அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் மஞ்சப்பை விநியோகிக்கும் தானியங்கி எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

ஒரிரு நாட்களில் இந்த இயந்திரம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இது தொடர்பாக, அதிகாரிகள் கூறும் போது, "பொது மக்களிடம் மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த எந்திரத்தில் மொத்தம் 300 பைகள் இருப்பு வைக்க முடியும். ஒரு பையின் விலை ரூ.10. எந்திரத்தில் ரூ.10 நாணயம் மற்றும் ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 நோட்டுகளை செலுத்தி, தேவையான எண்ணிக்கையை குறிப் ிட்டு பையை பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால், இதில் மீதி சில்லரையை பெற முடியாது.

க்யூ ஆர் கோடு வசதியும் உள்ளது. ஜி-பே, பரிவர்த்தனைகள் மூலமும் ஸ்கேன் செய்து தொகையை செலுத்தி பையை பெற்றுக் கொள்ளலாம்" என்றனர்.

Tags:    

Similar News