உள்ளூர் செய்திகள் (District)

ஓசூர், தேன்கனிக்கோட்டையில் ஐ.டி.ஐ நேரடி சேர்க்கையில் கலந்து கொள்ள அழைப்பு

Published On 2023-08-25 10:13 GMT   |   Update On 2023-08-25 10:13 GMT
  • பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும்.
  • புதுமைபெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கூடுதலாக உதவி தொகை கிடைக்கும்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

ஓசூர் மற்றும் தேன்கனிக் கோட்டை அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்களில் 2023-24-ம் கல்வியாண்டில் காலியாக உள்ள தொழிற்பிரிவுகளுக்கு மாணவர் நேரடி சேர்க்கை மேற்கொள்ள வருகிற 31-ந் தேதி கால அவகாசம் நீட்டித்து அனுமதி வழங்கப் பட்டு உள்ளது. மேற்காணும் அரசு தொழிற்பயிற்சி நிலை யங்களில் படிக்க விரும்பும் பயிற்சியாளர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்க ளுடன் வருகிற 31-ந் தேதிக்குள் நேரில் வந்து உரிய கட்டணம் செலுத்தி, நேரடி சேர்க்கையில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக ்கொள்ளப்படுகிறது.

இந்த பயிற்சி காலத்தின் போது, பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடப்புத்தகம், வரைபட கருவிகள், மடிகணினி, சீருடை, சைக்கிள் பஸ் பயண அட்டை, ஷு ஆகியவை வழங்கப்படும். அரசு பள்ளியில் படித்த மாணவி களுக்கு புதுமைபெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 கூடுதலாக உதவி தொகை கிடைக்கும். ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு. பெண் பயிற்சி யாளர்களுக்கு அருகில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் தங்குவதற்கு பரிந்துரை செய்யப்படும். மேலும், பயிற்சி முடித்து செல்லும் பயிற்சி யாளர்களுக்கு 100 சதவிகிதம் தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற தரப்படுகிறது.

எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் ஓசூர் மற்றும் தேன்கனிக்கோட்டை அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயனடையலாம் என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு தனது செய்திக்குறிப்பில் கலெக்டர் சரயு தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News