உள்ளூர் செய்திகள் (District)

பேரல்களில் இருந்த சாராய ஊறல்கள் அழிக்கப்பட்ட காட்சி.

கல்வராயன்மலை பகுதியில் 600லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

Published On 2023-07-30 09:23 GMT   |   Update On 2023-07-30 09:23 GMT
  • கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல்
  • கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டை

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு முண்டியூர் கிராமத்தில் ஆற்றின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 3 பேரல்களில் சுமார் 600 லிட்டர் சாராயஊறல்களை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன் தலைமையி லான போலீசார் கல்வரா யன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது முண்டியூர் கிராமத்தில் ஆற்றின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய 600 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.

Tags:    

Similar News