உள்ளூர் செய்திகள் (District)
கல்வராயன்மலை பகுதியில் 600லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
- கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல்
- கல்வராயன்மலை பகுதியில் தேடுதல் வேட்டை
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு முண்டியூர் கிராமத்தில் ஆற்றின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊறல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 3 பேரல்களில் சுமார் 600 லிட்டர் சாராயஊறல்களை பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் கரியாலூர் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்தி ரன் தலைமையி லான போலீசார் கல்வரா யன்மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது முண்டியூர் கிராமத்தில் ஆற்றின் அருகே கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய 600 லிட்டர் சாராய ஊறல்களை கண்டுபிடித்து சம்பவ இடத்திலேயே கொட்டி அழிக்கப்பட்டது.