உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

இரணியல் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

Published On 2022-10-11 07:46 GMT   |   Update On 2022-10-11 07:46 GMT
  • வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த இவர் மாவடிகுளத்தில் குளித்த போது வலிப்பு ஏற்பட்டதில் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது.
  • இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

இரணியல் அருகே உள்ள ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பின் பெனட் (வயது 45). கூலித் தொழிலாளி. இவர் வலிப்பு நோய் வந்து அடிக்கடி அவதிப்பட்டு வந்தார். ஆல்பின் பெனட் தனது 2 குழந்தைகளுடன் மாடத்தட்டுவிளையில் உள்ள அவரது சகோதரி வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஆல்பின் பெனட் மாடத்தட்டுவிளையில் உள்ள மாவடிகுளத்திற்கு குளிக்க சென்றார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டதாக தெரிகிறது. தண்ணீரில் மூழ்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது சகோதரர் ஜாண் ஜஸ்டஸ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News