உள்ளூர் செய்திகள்

கோப்பு படம் 

இரணியல் அருகே குளத்தில் மூழ்கி பெண் பலி

Published On 2022-10-07 08:08 GMT   |   Update On 2022-10-07 08:08 GMT
  • இவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.
  • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

இரணியல் அருகே ஆளூர் அடுத்த ஸ்ரீகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 45). இவரது மனைவி பிரியா என்ற ராமலெட்சுமி (44). இவருக்கு உடல்நிலை பாதிப்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் ராமலெட்சுமி அப்பகுதியில் உள்ள நெடுங்குளத்தில் குளிக்க சென்றார். அப்போது ராம லெட்சுமி தண்ணீரில் எதிர்பாராதவிதமாக மூழ்கியுள்ளார்.

இதனை பார்த்து உறவி னர்கள் அவரை உடனடி யாக மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராமலெட்சுமியை பரிசோதனை செய்த போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது கணவர் சசிகுமார் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News