உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே வேலை செய்த வீட்டில் நகை திருடிய பெண் கைது

Published On 2022-08-21 08:00 GMT   |   Update On 2022-08-21 08:00 GMT
  • இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
  • ரூ. 9 லட்சம் மற்றும் 12 பவுன் எடை கொண்ட தங்க சங்கிலி மாலை, ஒரு பவுன் எடை கொண்ட தங்க மோதிரம் ஆகியவை காணவில்லை

கன்னியாகுமரி:

இரணியல் அருகே உள்ள வில்லுக்குறி குதிரைப்பந்தி விளையை சேர்ந்தவர் ஜோசப் அலெக்சாண்டர் (வயது 84). ஓய்வு பெற்ற ஆசிரியர்.

இவரது மனைவி மேரி ரெத்னா ஜோதி (80). இவர்க ளுக்கு 2 மகள்கள் உள்ளனர. இருவரும் திருமணமாகி வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். இதனால் தனியாக மனைவியுடன் வசித்து வந்த ஜோசப் அலெக்சாண்டர் தங்களை கவனித்து கொள்ள வில்லுக்குறி ஆர்.சி தெரு வைச் சேர்ந்த மெல்டா (42) என்பவரை பணிக்கு வைத்திருந்தார்.

இவர் கடந்த 2 ஆண்டு களுக்கும் மேலாக ஆசிரியர் வீட்டில் பணிபுரிந்துவந்தார். சம்பவத்தன்று ஜோசப் அலெக்சாண்டர் பணம் எடுப்பதற்காக வீட்டில் இருந்த பீரோவை திறந்தார். அப்போது பீரோவில் இருந்த ரூ. 9 லட்சம் மற்றும் 12 பவுன் எடை கொண்ட தங்க சங்கிலி மாலை, ஒரு பவுன் எடை கொண்ட தங்க மோதிரம் ஆகிய வற்றை காணாது அதிர்ச்சி யடைந்தார்.

இதுகுறித்து ஜோசப் அலெக்சாண்டர் இரணியல் போலீசில் புகார் அளித்தார்.அதில் வீட்டில் வேலை செய்யும் மெல்டா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருந்தார். அதன்பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து மெல்டா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

Similar News