உள்ளூர் செய்திகள்

கன்னியாகுமரி அரசு பழத்தோட்டத்தில் கூடுதல் செடிகள் வைக்க ஏற்பாடு

Published On 2023-05-18 06:49 GMT   |   Update On 2023-05-18 06:49 GMT
  • சுற்றுலா பயணிகளை கவரும்வகையில் அழகு படுத்தவும் நடவடிக்கை
  • 31 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் 15 ஏக்கர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி :

கன்னியாகுமரியில் மெயின் ரோட்டில் தமிழக அரசின் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான அரசு பழத்தோட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துஉள்ளது.

1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பழப்பண்ணை 31 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் 15 ஏக்கர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த அரசு பழத்தோட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேற்று நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அவர் அரசு பழத்தோட்டத் தில் இயற்கை பொருட் களைக் கொண்டு சாக்லேட் தயாரிக்கப்படும் கூடத்தை சென்று பார்வை யிட்டார்.

மேலும் அரசு பழத் தோட்டத்தில் உற்பத்தியாகும் பல்வேறு வகையான மாமரங்களையும் பார்வை யிட்டார். செடிகள் உற்பத்தி செய்யப்படும் இடத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

சுற்றுச்சூழல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேலும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா, கன்னியாகுமரி அரசு தோட்டக்கலைப் பண்ணை மேலாளர் சக்திவேல், வேளாண்மை உதவி இயக்குனர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News