உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே முன்விரோதம் காரணமாக சிறுவன் மீது தாக்குதல்

Published On 2022-06-24 09:41 GMT   |   Update On 2022-06-24 09:41 GMT
  • காயமடைந்த சிறுவனுக்கு குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை
  • இரணியல் போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

இரணியல் அருகே நெய்யூர் காணாங்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் (வயது 41). இவருக்கும் இரணியல்கோணம் பகுதியை சேர்ந்த விமல்தாஸ் (36) என்பவருக்கும் கோவில் திருவிழாவின் போது நடந்த சம்பவம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்று காணாங்குளம் ராஜேஷ் வீட்டின் அருகில் வந்த விமல்தாஸ் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 4 பேர் அவதூறாக பேசியதாக தெரிகிறது. அப்போது ஏற்பட்ட தகராறில் ராஜேஷின் 13 வயது மகனை 4 பேரும் சேர்ந்து கையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சிறுவன் குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ராஜேஷ் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் விமல்தாஸ் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News