உள்ளூர் செய்திகள் (District)

கருங்கல் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் படுகாயம்

Published On 2022-08-24 07:17 GMT   |   Update On 2022-08-24 07:17 GMT
  • டிரைவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
  • கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி:

கருங்கல் அணஞ்சிகோடு பகுதியை சேர்ந்தவர் சுமன் (வயது 40). இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார்.சம்பவத்தன்று ஆப்பி கோட்டிற்கு சென்றுவிட்டு சுமன் வீட்டிற்கு வரும்போது பருத்திவிளை சாஸ்தா கோவில் அருகே எதிர்பாராதவிதமாக ஆட்டோ கவிழ்ந்தது.

இதில் சுமன் பலத்த காயம் அடைந்தார். இதனைக் கண்டவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சுமன் சிகிச்சை பெற்று வரு கிறார். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

Tags:    

Similar News