உள்ளூர் செய்திகள்

குளச்சல் அருகே போதையில் வாகனம் ஓட்டிய டிரைவர் மீது வழக்கு

Published On 2022-06-07 10:06 GMT   |   Update On 2022-06-07 10:06 GMT
  • குளச்சல் போக்குவரத்து போலீசார் நேற்றிரவு தோட்டியோடு பகுதியில் நடத்திய தீவிர வாகன சோதனையில் நடவடிக்கை.
  • டிரைவர் மீது வழக்குபதிவு

கன்னியாகுமரி:

குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போக்குவரத்து போலீசார் நேற்றிரவு தோட்டியோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மரம் லோடு ஏற்றி வந்த ஒரு டிம்போ சாலையில் நிலை தடுமாறி வந்தது. போலீசார் உடனே டிம்போவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் ஓட்டுனர் குமார் (வயது 46) மது அருந்திவிட்டு டிம்போ ஓட்டி வந்தது தெரிய வந்தது. உடனே போலீசார் டிம்போவை போலீஸ் நிலையம் கொண்டு வந்து டிரைவர் மீது வழக்குபதிவுசெய்தனர்.

Tags:    

Similar News