உள்ளூர் செய்திகள்

இரணியல் அருகே சிறுமியிடம் நகை பறிப்பு

Published On 2023-05-01 06:53 GMT   |   Update On 2023-05-01 06:53 GMT
  • மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து சிறுமியிடம் தக்கலை செல்ல வழி கேட்டுள்ளார்
  • வழி சொல்லிக்கொண்டிருக்கும் போது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்

கன்னியாகுமரி :

இரணியல் அருகே உள்ள கண்டன்விளையை அடுத்த சடையமங்கலம் இறுங்கன் விளாகத்துவீடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், தொழிலாளி. இவருடைய 13 வயது மகள் நேற்று காலை 7.30 மணிக்கு பக்கத்தில் உள்ள வீட்டிற்கு பால் வாங்க நடந்து சென்றார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வந்துள்ளார். அவர், மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி வந்து சிறுமியிடம் தக்கலை செல்ல வழி கேட்டுள்ளார். சிறுமி வழி சொல்லிக்கொண்டிருக்கும் போது அந்த வாலிபர், சிறுமி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். மேலும் சத்தம் போட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்று விட்டாராம்.

சம்பவம் குறித்து சிறுமி, வீட்டில் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து அவரது தந்தை மணிகண்டன், இரணியல் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News