உள்ளூர் செய்திகள்

மார்த்தாண்டம் அருகே பெயிண்டர் தற்கொலை

Published On 2022-06-08 10:20 GMT   |   Update On 2022-06-08 10:20 GMT
  • கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே முளம்குழி செட்டிச்சார் குழிவிளையை சேர்ந்த பெயிண்டர் விஷம் அருந்தி பரிதாபமாக இறந்தார்.
  • அவரது மகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட முளம்குழி செட்டிச்சார் குழிவிளையை சேர்ந்தவர் ராபர்ட் சிம்சன் (வயது 60), பெயிண்டர். இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் அருந்தி மயங்கிய நிலையில் கிடந்து உள்ளார்.

உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராபர்ட் சிம்சன் பரிதாப மாக இறந்தார்.

இது குறித்து அவரது மகன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News