உள்ளூர் செய்திகள் (District)

இரணியல் அருகே குழந்தையிடம் நகை திருடியதாக பெண் மீது வழக்கு

Published On 2022-06-06 09:41 GMT   |   Update On 2022-06-06 12:46 GMT
  • இரணியல் அருகே அழகன்பாறை அடுத்த குன்னங்காடு அரசமூடு பகுதியை சேர்ந்த பெண் குழந்தை கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின் திருட்டு.
  • புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி:

இரணியல் அருகே அழகன்பாறை அடுத்த குன்னங்காடு அரசமூடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 57). இவரது அண்ணன் மகள் பபிதாவின் நான்கரை வயது பெண் குழந்தை நேற்று காலை வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் குழந்தை கழுத்தில் கிடந்த 2 பவுன் செயினை திருடியதாக வேல்முருகன் கொடுத்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News