உள்ளூர் செய்திகள் (District)

மண்டைக்காடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி பெண் படுகாயம்

Published On 2022-07-15 08:46 GMT   |   Update On 2022-07-15 08:46 GMT
  • நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை.
  • மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

கன்னியாகுமரி:

மண்டைக்காடு புதூரை சேர்ந்தவர் வில்லியம். இவரது மனைவி பேபி (வயது 58). சம்பவத்தன்று இரவு இவர் மண்டைக்காட்டில் உள்ள மருந்துக்கடைக்கு சென்று மருந்து வாங்கி விட்டு வீட்டுக்கு திரும்பினார். புதூர் ஏ.வி.எம். சானல்கரை சாலையில் நடந்து செல்லும்போது மண்டைக்காடு நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் பேபி மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.

அப்பகுதியினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கோடிமுனையை சேர்ந்த ஜெனிபன் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News