உள்ளூர் செய்திகள் (District)
கன்னியாகுமரியில் இருந்து மத்திய பிரதேசத்துக்கு இளைஞர்கள் மோட்டார் சைக்கிள் சாதனை பயணம்
- பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் தொடங்கி வைத்தார்
- 4ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 7 நாட்களில் மோட்டார் சைக்கிளில் கடந்து செல்கிறார்கள்.
கன்னியாகுமரி:
இந்தியாவின் 75- வது சுதந்திர தின விழாவையொட்டி கேரளாவை சேர்ந்த 23 இளைஞர்கள் கன்னியாகுமரியில் இருந்து மத்திய பிரதேசம் வரை மோட்டார் சைக்கிள் சாதனைப் பயணம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி இந்த மோட்டார் சைக்கிள் சாதனை பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி கடற்கரை சாலையில் நடந்தது. கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் கலந்து கொண்டு கொடியசைத்து பயணத்தை தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த சாதனை மோட்டார் சைக்கிள் பயணம் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மராட்டியம் உள்பட6 மாநிலங்கள் வழியாக வருகிற 11-ந்தேதி மத்தியபிரதேசத்தை சென்றடைகிறது. மொத்தமுள்ள 4ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை 7 நாட்களில் மோட்டார் சைக்கிளில் கடந்து செல்கிறார்கள்.