உள்ளூர் செய்திகள் (District)

காரைக்கால் திரு.பட்டினம் ஏரியில் விவசாயி பிணம்

Published On 2022-11-28 07:32 GMT   |   Update On 2022-11-28 07:32 GMT
  • 24-ந் தேதி இரவு படுதா ர்கொல்லை ஏரியில் குளிக்க செல்வதாக நாராயணசாமி மனைவியுடன் கூறி சென்றார்.
  • முதியவர் பிணம் குறித்து, திரு.பட்டினம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் படுதார்கொல்லை ஏரியில் மிதந்த, முதியவர் பிணம் குறித்து, திரு.பட்டினம் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் படுதா ர்கொல்லை முத்தாம் பள்ளம் பேட்டை ச்சேர்ந்தவர் நாரா யணசாமி (வயது70). விவசாய கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி மீனாட்சி. இவர்களுக்கு 2 மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நாராயணசாமி மனைவியுன் வசித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 24-ந் தேதி இரவு படுதா ர்கொல்லை ஏரியில் குளிக்க செல்வதாக நாராயணசாமி மனைவியுடன் கூறி சென்றார். நீண்டநேரம் ஆகியும் நாராயணசாமி வீட்டுக்கு வராததால், உறவினர்கள் ஏரி மற்றும் அதன் சுற்று பகுதியில் தேடினர். நாராயணசாமி கிடைக்கவில்லை.

இந்நிலையில், நாராயண சாமி ஏரியில் பிணமாக மிதப்ப தாக திரு.பட்டினம் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீசார், நாராயணசாமி உடலை கைபற்றி, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்க்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News