உள்ளூர் செய்திகள் (District)

சிறுமி உட்பட 2 பேர் மாயம்

Published On 2022-09-17 08:28 GMT   |   Update On 2022-09-17 08:28 GMT
  • சிறுமி உட்பட 2 பேர் மாயமானார்கள்
  • 10ம் வகுப்பு படித்து வருகிறார்.

கரூர்:

கரூர் மாவட்டம், ஜெகதாபி, வடக்கு தெருவை சேர்ந்தவ, 19 வயதுடைய இளம்பெண், தரகம்பட் டியில் உள்ள அழகு நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 12-ந் தேதி வேலைக்கு செல்வதாக சென்றவர், வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, பெண்ணின் தந்தை மருதமுத்து வெள்ளியணை போலீசில் புகார் செய்துள்ளார். இதே போல், வெள்ளியணை, குமாரபாளையம்புதுார் பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமி, அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரை கடந்த, 14-ந் தேதி முதல் காணவில்லை என, சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்துள்ளார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News