உள்ளூர் செய்திகள் (District)
தரகம்பட்டி அருகே மது விற்ற 2 பேர் கைது
- தரகம்பட்டி அருகே மது விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்
- போலீசார் அவர்கயிடமிருந்த மதுபானங்களை பறிமுதல் செய்தனர்
கரூர்:
கரூர் மாவட்டம் கடவூர் தரகம்பட்டி அருகே செம்பியநத்தம் ஊராட்சி அரசக்கவுண்டனூரை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் லோகநாதன் (வயது31). இவர் விராலிப்பட்டி பகுதியில் உள்ள நான்கு ரோடு அருகே மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து உள்ளார். இதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் சேகர் மகன் சிவக்குமார்(32) தேவர்மலை ஊராட்சி சீத்தப்பட்டி அரசு மதுபானக்கடை அருகே மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் அந்த பகுதிகளை ஆய்வு செய்து லோகநாதன், சிவக்குமார் ஆகியோர் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த மதுபானங்களை பறிமுதல் செய்து இருவரையும் கைது செய்தனர்.