உள்ளூர் செய்திகள் (District)

பெண்ணிடம் தகராறு செய்த 3 வாலிபர்கள் கைது

Published On 2023-05-12 06:30 GMT   |   Update On 2023-05-12 06:31 GMT
  • பெண்ணிடம் தகராறு செய்த 3 வாலிபர்கள் கைது செய்யபட்டனர்
  • இது குறித்து காமாட்சி தான்தோன்றிமலை போலீசில் புகார் அளித்தார்.

கரூர்,

கரூர் தான்தோன்றிமலை கடைத்தெருவை சேர்ந்தவர் காமாட்சி (வயது37). இவருடைய கணவர் ராமு பெட்டி கடை முன் பொருட்கள் வாங்க நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் (19), நவீன் (19), லோகேஷ் (22) ஆகிய 3 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து ராமு மீது மோதியுள்ளனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்ற 3 பேரும் மது போதையில் காமாட்சி வீட்டில் புகுந்து தகராறில் ஈடுபட்டதோடு, தட்டி கேட்ட காமாட்சியை கட்டையால் தாக்கியுள்ளனர். இது குறித்து காமாட்சி தான்தோன்றிமலை போலீசில் புகார் அளித்தார். புகாரின்படி தாக்குதல் நடத்திய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News