உள்ளூர் செய்திகள் (District)
க.பரமத்தி அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது
- க.பரமத்தி அருகே மதுபாட்டில்கள் பதுக்கி விற்றவர் கைது செய்யபட்டார்
- போலீசார் அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
கரூர்:
கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்த விசுவநாதபுரி அருகே தண்ணீர்பந்தல் பிரிவு பகுதியில் அனுமதியின்றி மது விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் க.பரமத்தி போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது விசுவநாதபுரி தெற்கு தெரு பகுதியை சேர்ந்த சிலம்பன் மகன் நாகராஜன் என்பவர் மது விற்பனைக்காக 6 பாட்டில்கள் பதுக்கி இருந்தது கண்டறியப்பட்டது. அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த க.பரமத்தி போலீசார், நாகராஜன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.