உள்ளூர் செய்திகள் (District)

விபத்தில் பெண் பலி

Published On 2023-03-14 06:59 GMT   |   Update On 2023-03-14 06:59 GMT
  • டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தாய் பலி, மகன் படுகாயம்
  • மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

கரூர், 

அரவக்குறிச்சி அருகே, டூவீலர் மீது கார் மோதிய விபத்தில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த பெண் உயிரிழந்தார்.திண்டுக்கல் மாவட்டம், மார்க்கம்பட்டியை சேர்ந்த பாலமுருகன் என்பவரது மனைவி தமிழ் செல்வி (வயது 50) இவர், நேற்று மதியம், கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே இனுங்கூர் பகுதியில், மகன் தருண்குமார், (21)என்பவருடன், டூவீலரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக சென்ற கார், டூவீலர் மீது மோதியது. அதில், கீழே விழுந்த தமிழ்செல்வி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தருண்குமார் படுகாயமடைந்து, அரவக்குறிச்சி அரசு மருத்துவம னையில், சிகிச்சை பெற்று வருகிறார். 

Tags:    

Similar News