உள்ளூர் செய்திகள் (District)

கரூரில் அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்

Published On 2023-08-26 07:05 GMT   |   Update On 2023-08-26 07:05 GMT
  • உயர் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று கரூரில் அ.தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
  • ஏராளமான அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு

கரூர்,

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நான்கு பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை கடந்த ஜூன் 28-ல் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் உத்தரவிட்டனர். இதை அடுத்து கரூர் மாவட்ட அ.தி.மு.க அவை தலைவர் திரு விகா தலைமையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை வரவேற்று பஸ் நிலையம் ரவுண்டானா அருகே மனோகரா கார்னர் பகுதியில் பட்டாசு வெடித்தும், பொது மக்களுக்கு இனிப்புகளும் வழங்கி கொண்டாடினர். அப்போது பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன், முன்னாள் நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் தெற்கு பகுதி செயலாளர் விசிகே ஜெயராஜ், மத்திய தெற்கு பகுதி செயலாளர் சேரன் பழனிச்சாமி, பகுதி செயலாளர் சக்திவேல், மாநகராட்சி கவுன்சிலர் சுரேஷ், தினேஷ்குமார் உட்பட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News