உள்ளூர் செய்திகள் (District)

கரூர் அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது

Published On 2023-05-12 06:33 GMT   |   Update On 2023-05-12 06:33 GMT
  • கரூர் அருகே கஞ்சா விற்ற முதியவர் கைது செய்யபட்டார்
  • அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

கரூர்,

கரூர்-திண்டுக்கல் சாலை மணவாடி பஸ் ஸ்டாப் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கரூர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கருர் தெற்கு காந்திகிராமம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் (வயது 64) என்பவர் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த முதியவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து அவருக்கு கஞ்சா எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்பது குறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News