உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு முகாம்

Published On 2023-05-19 06:31 GMT   |   Update On 2023-05-19 06:39 GMT
  • விழிப்புணர்வு முகாம் நடந்தது
  • அரசின் நலத்திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறப்பட்டது

கரூர்,

கரூர் பள்ளப்பட்டியில் சிறுபான்மையினருக்கான நலத்திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளப் பட்டி நகராட்சி தலைவர் எஸ்.ஏ.முனவர்ஜான் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் கே.பி. குமரன் முன்னிலை வகித்தார். சிறுபான்மை மக்களுக்கு வங்கி கடன், தொழில் தொடங்க கடன், மாணவ மாணவிகளுக்கு கல்விக்கடன் உள்ளிட்ட பலதரப்பட்ட அரசின் நலத்திட்டங்கள் பற்றி ஒவ்வொரு துறை வாயிலாக எடுத்துக் கூறப்பட்டது.

Tags:    

Similar News