உள்ளூர் செய்திகள் (District)

நீதிமன்ற வளாகத்தில் ரத்ததான முகாம்

Published On 2022-07-21 09:04 GMT   |   Update On 2022-07-21 09:04 GMT
  • நீதிமன்ற வளாகத்தில் ரத்ததான முகாம் நடைபெற்றது
  • 75 பேர் தானம் செய்தனர்.

கரூர்:

கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக ரத்ததான முகாம் கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட நீதிபதியுமான சண்முகசுந்தரம் முகாமை தொடங்கி வைத்தார். இதில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என 75 பேர் ரத்ததானம் வழங்கினார். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கியினர் ரத்ததான சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர். கரூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான எம்.பாக்கியம் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags:    

Similar News