உள்ளூர் செய்திகள் (District)

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

Published On 2023-07-22 08:39 GMT   |   Update On 2023-07-22 08:39 GMT
  • வீட்டின் பூட்டை உடைத்து நகை திருடப்பட்டு உள்ளது
  • போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

கரூர், 

குளித்தலை அடுத்த, ஆர்.புதுக்கோட்டையை சேர்ந்தவர் கலையரசி(வயது 44). அங்கன்வாடி பணியாளரான இவர் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர் மதியம், திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ஆறு பவுன் தங்க நகை திருட்டு போனது தெரிய வந்தது. இது குறித்து கலையரசி கொடுத்த புகார்படி, மாயனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News