உள்ளூர் செய்திகள்

கொலை மிரட்டல் - 4 பேர் மீது வழக்கு

Published On 2022-06-22 08:45 GMT   |   Update On 2022-06-22 08:45 GMT
  • கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
  • முன்விரோதம் காரணமாக நடைபெற்றது

கரூர்:

குளித்தலை அருகே உள்ள குப்புரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 39). அதே பகுதியை சேர்ந்த சரவணகுமார் என்பவர் மது விற்ற வழக்கில் சிறையில் இருந்துள்ளார். அவருக்கு கிருஷ்ணனின் அண்ணன் வேல்முருகன் ஜாமீன் கொடுத்ததால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக குப்புரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த

மோகன், தேவேந்திரன், பிரகாஷ், விஜயகாந்த் உள்ளிட்டோர் கிருஷ்ணனை தகாதவார்த்தைகளால் திட்டி கத்தியால் கிருஷ்ணனின் கண் புருவத்தின் மேல் குத்தியுள்ளனர்‌. பின்னர் வேல்முருகன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவரது மனைவி கீதா மற்றும் அவரது மகன் பிரகாஷ் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கிருஷ்ணன் அளித்த புகாரின் பேரில் மோகன், தேவேந்திரன், பிரகாஷ், விஜயகாந்த் ஆகியோர் மீது குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்."

Tags:    

Similar News