உள்ளூர் செய்திகள்

தக்காளி விலையை கட்டுப்படுத்த கோரிக்கை

Published On 2023-08-01 07:05 GMT   |   Update On 2023-08-01 07:05 GMT
  • கரூரில் தக்காளி விலையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
  • தற்போது ரூ.180 வரை விற்கப்படுகிறது

கரூர்,

தக்காளியின் விலை தற்போது உச்சத்தை தொட்டு உள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி ரூ. 100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தக்காளி விலையை கட்டுப்படுத்தும் வகையில் வேளாண்மைத்துறை சார்பில் குறிப்பிட்ட சில ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு தக்காளி விற்பனை செய்யப்பட்டது.இருப்பினும் தற்போதைய நிலையில் கரூர் உழவர் சந்தையில் தக்காளி கிலோ ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. மற்ற பகுதிகளில் கிலோ ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தக்காளி விலையை கட்டுப்படுத்தவும், மக்களுக்கு நியாயமான விலையில் தக்காளி கிடைக்கவும் தமிழக அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. அத்தியாவசிய பொருளான தக்காளி விலை உயர் வால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த விலை உயர்வை கட்டுப்படுத்தி, குறைந்த விலைக்கு தக்காளி கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News