உள்ளூர் செய்திகள் (District)
- மின் பாதுகாப்பு பயிற்சி முகாம் நடந்தது
- பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது
கரூர்:
கரூர் தாந்தோண்றிமலையில் மின் பாதுகாப்பு குறித்து பயிற்சி முகாம் நடந்தது. கரூர் மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் வேல்முருகன் தலைமை வகித்தார். மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் குறித்த சிறப்பு கவனம் செலுத்துதல், விபத்தில்லாமல் பணி செய்ய கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறை உட்பட பல்வேறு ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் மின்வாரிய செயற்பொறியாளர் கணிகைமார்த்தாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.