உள்ளூர் செய்திகள் (District)
- கரூரில் இலவச மருத்துவ முகாம் வருகிற 10ந் தேதி காலை 8 மணி முதல் 2 மணி வரை நடக்கிறது
- வெள்ளைபடுதல், கர்ப்பப்பை கட்டி, குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கரூர்,
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கரூர் மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை சார்பில் கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவனையில் மக்களை தேடி மருத்துவ முகாம் வருகிற 10ந் தேதி காலை 8 மணி முதல் 2 மணி வரை நடக்கிறது. இலவச சிறப்பு சித்தா மற்றும் ஓமியோ மருத்துவ முகாமில் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, வயிற்று புண், உடல் பருமன், மலக்கட்டு, மூட்டு வலி, தைராய்டு, பொடுகு, கரப்பான், மூலம், பவுதிரம், வெள்ளைபடுதல், கர்ப்பப்பை கட்டி, குழந்தையின்மை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.