உள்ளூர் செய்திகள் (District)

சாலை விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலி

Published On 2023-02-17 07:36 GMT   |   Update On 2023-02-17 07:36 GMT
  • சாலை விபத்தில் அரசு பஸ் கண்டக்டர் பலியானார்
  • இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.

கரூர்:

கரூர் அருகே, உப்பிடமங்கலத்தை சேர்ந்தவர் ரவி (வயது 54). தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவர், அரவக்குறிச்சி அருகே கரூர் - திண்டுக்கல் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி விழுந்ததில், ரவி பலத்த காயமடைந்தார். பின், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.


Tags:    

Similar News