உள்ளூர் செய்திகள் (District)

கரூரில் கார், டூவீலர் மோதிய விபத்தில் கணவன்-மனைவி பலி

Published On 2023-02-25 08:14 GMT   |   Update On 2023-02-25 08:14 GMT
  • கரூரில் கார், டூவீலர் மோதிய விபத்தில் கணவன், மனைவி பலியானார்
  • விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

கரூர்:

அரவக்குறிச்சி அம்மன் நகரைச் சேர்ந்தவர் ராஜூ(வயது 50). இவர் மனைவி தனக்கொடி (45). மகன் முரளி(35). இவர்கள் 2 டூவீலர்களில் புதுவாடி நோக்கி சென்று கொண்டிருந்தனர் இவர்கள் சென்ற டூவீலர்கள் மேட்டுப்பட்டி பிரிவு சாலை அருகே ஜெபமாலைராஜ் (62) என்பவர் ஓட்டிவந்த கார் மோதிக் கொண்டன. இதில் ராஜூ, தனக்கொடி ஆகியோர் சாலை ஓர பள்ளத்தில் விழுந்து பலி யானார்கள். விபத்து குறித்து அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்




Tags:    

Similar News