உள்ளூர் செய்திகள் (District)
கீழப்பழுவூர் அருகே மனைவியை கொலை செய்த கணவர் கைது
- கீழப்பழுவூர் அருகே மனைவியை கொலை செய்த கணவர் கைது செய்யபட்டார்
- தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கீழப்பழுவூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே கள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது40). இவரது மனைவி ஜெயசித்ரா (32). இவரது மீது சந்தேகமடைந்த பாலகிருஷ்ணன் தினமும் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து தகராறில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது. இந்நிலையில் மது போதையில் வீட்டுக்கு வந்த பாலகிருஷ்ணன் தகராறில் ஈடுபட்டு ஜெயசித்ராவை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கீழப்பழுவூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.