உள்ளூர் செய்திகள் (District)

மகாசிவராத்திரி 108 திருவிளக்கு பூஜை

Published On 2023-02-20 09:42 GMT   |   Update On 2023-02-20 09:42 GMT
தொண்டமங்கிணம் ஆதிசிவன் கோவிலில் நடந்தது

குளித்தலை, 

குளித்தலை அருகே கடவூர் வட்டத்திற்குட்பட்ட தொண்டமாங்கினத்தில் உள்ள குள்ளாயிஅம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஆதிசிவன் சுயம்பேஸ்வரர் கோவிலில் மஹா சிவன்ராத்திரியை முன்னிட்டு மூன்றாம் ஆண்டு ஆதி சிவன் வழிபாட்டு மன்றம் மற்றும் கிராம பொதுமக்கள் சார்பாக 108 திருவிளக்கு பூஜை, மற்றும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து நான்கு கால சிறப்பு பூஜைகளும் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தொடர்ந்து திருவிளக்கு பூஜையில் சுமார் 500க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு வேண்டுதல்களை எண்ணி மலர்கள் தூவி திருவிளக்கு பூஜை செய்தனர். அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. சிவன் வழிபாட்டு மன்றத்தினர் விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர். தொடர்ந்து இன்று மாலை கரகம் விடுதல் நிகழ்ச்சி நடைபெறும்.

Tags:    

Similar News