உள்ளூர் செய்திகள் (District)
கஞ்சாவை பதுக்கி விற்க முயன்றவர் கைது
- கைது செய்யப்பட்டவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல்
- வாலிபரை கைது செய்து போலீசார் விசாரணை
கரூர்,
கரூர் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ய முயன்ற வாலிபரை மதுவிலக்கு போலீ சார் கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.கரூர் பசுபதிபாளையம் அடுத்துள்ள சணப்பிரட்டி ஒட்டியுள்ள பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கருர் மதுவிலக்கு போலீசார்களுக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்குசென்ற போலீசார், அந்த பகுதியில் விசாரணை மேற்கொண்ட போது, இதே பகுதியை சேர்ந்த அரவிந்த்(வயது 21) என்பவர் கஞ்சாவை பதுக்கி வைத்துவிற்பனை செய்து வந்தது தெரியவந் தது. இதனையடுத்து, வாலிபரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.