மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளிக்கும் போராட்டம்
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிaயினர் மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது
- மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி
கரூர்:
மின் கட்டண உயர்வை திரும்பப் பெறவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெருந்திரள் முறையீடு மனு கொடுக்கும் இயக்கம் மாநகரச் செயலாளரும், கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான தண்டபாணி தலைமையில் நடைபெற்றது.
அந்த மனுவில், தேர்தல் அறிக்கையில் கூறியதுப்போல மாதந்தோறும் மின் உபயோக கணக்கீடு செய்யவேண்டும். தமிழக அரசின் உத்தேச மின் கட்டண உயர்வைத் திரும்ப பெறவேண்டும் என வலயுறுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ஜோதிபாசு, அசோக் நகர் கிளை செயலாளர் சதீஷ்கு மார், தியாகராஜன், சக்திவேல், ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி பாலவிடுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளரிடம் விவசாயத் தொழிலாளர் சங்க வட்டச்செயலாளர் பி.வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.ராமமூர்த்தி, வட்டக்குழு செயலாளர் பழனிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர். பங்கேற்றனர்.