உள்ளூர் செய்திகள்

கரூரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மருத்துவ முகாம்

Published On 2023-04-20 07:02 GMT   |   Update On 2023-04-20 07:02 GMT
  • கரூரில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது
  • முகாமை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து பேசினார்.

கரூர்:

கரூர் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கோர்ட் வளாகத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, 40 வயதிற்கு மேற்பட்ட இளம் வக்கீல்கள் தங்கள் உடலை முழு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் உணவு, தூக்கம் எடுத்துக்கொண்டு உடலை பாதுகாக்க வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் மாரப்பன் தலைமை வகித்தார். தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் துணை சேர்மன் வேலு கார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். வழக்கறிஞர் காமராஜ், கரூர் வக்கீல் சங்க செயலாளர் தமிழ்வாணன், நிர்வாகிகள் சம்பத், கோபாலகிருஷ்ணன், சக்திவேல், பார்த்திபன், பாலாஜி காந்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News