மக்கள் குறைதீர் குடும்ப அட்டை திருத்த முகாம்
வேலாயுதம்பா ளையம்,
கரூர் மாவட்டம் புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் குடும்ப அட்டை திருத்த முகாம் நடைபெற்றது.
புகளூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலர் மல்லீஸ்வரன் தலைமையில் தனி வருவாய் ஆய்வாளர் பார்த்திபன் மற்றும் அலுவலர்கள் கொண்ட குழுவினர் மூலம் குடும்ப அட்டை திருத்த முகாம் நடைபெற்றது.
முகாமில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் புகளூர் தாலுகா விற்கு உட்பட்ட 27 வருவாய் கிராமங்களை சேர்ந்த குடும்ப அட்டைதா ரர்கள் கலந்து கொண்டு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், முகவரி திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல், கைபேசி எண் பதிவு மற்றும் கை பேசிஎண் மாற்றம் குறித்தும் மனுக்கள் கொடுத்து தீர்வு கண்டனர்.
அதேபோல் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகளின் குறைகள் குறித்தும் வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்த னர்.முகாம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்றது.