- தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது
- நாளை நடைபெறுகிறது
கரூர்:
கரூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்று கலெக்டர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம், டாடா எலக்ட்ரானிக்ஸ் இணைந்து நடத்தும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (25-ந் தேதி) கரூர் வெண்ணெய்மலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெற உள்ளது.
முன்னதாக அன்று காலை 8.30 மணி முதல் காலை 9.30 வரை அங்கே பதிவு செய்துகொண்டு தொடர்ந்து நடைபெறும் நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வேலைவாய்ப்பு முகாமில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் கலந்து கொண்டு 6,000 பெண் வேலை நாடுநர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இம்முகாமில் 2021 மற்றும் 2022 கல்வியாண்டில் பிளஸ் 2 வகுப்பு தேர்ச்சி பெற்று வயது வரம்பு 18 முதல் 20க்குள் இருப்பவர்கள் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் பெண் வேலை நாடுநர்கள் தங்களுடைய 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலினை எடுத்து வருமாறு தெரிவிக்கப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 04324- 223555ற்கு தொடர்புக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.