தந்தை சாவில் சந்தேகம் போலீஸ் அதிகாரியிடம் மகன் மனு
- தந்தை சாவில் சந்தேகம் உள்ளது என்று மகன் போலீஸ் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார்.
- விபத்தில் இறந்ததாக தகவல் தெரிவித்தனர்
கரூர்:
கரூர் மாவட்டம், ஜெகதாபி அடுத்த அல்லாளி கவுண்டனூர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் இன்று கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
எனது தந்தை வேலுசாமி என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக கரூர் மாவட்டம், க.பரமத்தி வெங்கடரமணசுவாமி புளூ மெட்டல் என்ற கல்குவாரியில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்திலையில் க.பரமத்தி காவல்நிலைய காவலர் எங்களை தொடர்பு கொண்டு, எனது தந்தை இன்று திருச்சி அரசு, மருத்துவமணையில் இறந்து விட்டதாகவும், அவர் கரூர் காருடையாம்பாளையம் அருகில் கடந்த மாதம் 21-ந் தேதி விபத்து ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமணையில் இறந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், வேறு எந்தவிதமான விரங்களையும் கூறவில்லை
எனவே எனது தந்தையின் இறப்பில் எனக்கும், என் குடும்பத்தாருக்கும் சந்தேகம் உள்ளது. என் அப்பா பணிபுரிந்த நிறுவனத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தெரிவித்திருந்தார்.