உள்ளூர் செய்திகள் (District)

முனியப்பசுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகம்

Published On 2023-02-13 09:49 GMT   |   Update On 2023-02-13 09:51 GMT
மலர்கள் மற்றும் எலுமிச்சம்பழ மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை...

கரூர் :

நொய்யல் அருகே முனியாதபுரத்தில் காவிரி கரை அருகே சுற்றுவட்டார பகுதி பொதுமக்களின் காவல் தெய்வமாக விளங்கும் முனியப்ப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் தைமாத கடைசி நாளை முன்னிட்டு முனியப்பசுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. ெதாடர்ந்து மலர்கள் மற்றும் எலுமிச்சம்பழ மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முனியப்ப சுவாமி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News