உள்ளூர் செய்திகள் (District)
சாலை விபத்தில் ஜவுளி நிறுவன மேற்பார்வையாளர் பலி
- சாலை விபத்தில் ஜவுளி நிறுவன மேற்பார்வையாளர் பலியானார்
- நொய்யல் ஆற்றுப் பாலம் அருகே வந்தபோது, இருவரும் நிலை தடுமாறி விழுந்ததில், இருவரும் படுகாயமடைந்தனர்.
கரூர்:
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, தழுவம்பாளையத்தை சேர்ந்தவர் பிரசாத் (வயது 24). இவர், திருப்பூர் பகுதியில் தனியார் ஜவுளி நிறுவனத்தில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். இவர், திருப்பூர் மாவட்டம், முத்தூர் ஆலம்பாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன் (35) என்பவருடன், கொடுமுடி- முத்தூர் சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கை பிரசாத் ஓட்டினார். நொய்யல் ஆற்றுப் பாலம் அருகே வந்தபோது, இருவரும் நிலை தடுமாறி விழுந்ததில், இருவரும் படுகாயமடைந்தனர். இதில், பிரசாத், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார்த்திகேயன் ஈரோட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்க ப்பட்டார். தென்னிலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.