உள்ளூர் செய்திகள்

கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சங்க புலவர்கள் தூணுக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை

Published On 2023-04-30 06:59 GMT   |   Update On 2023-04-30 06:59 GMT
  • கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சங்க புலவர்கள் தூணுக்கு கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
  • தமிழ் கவிஞர்கள் நாளை முன்னிட்டு நடைபெற்றது

கரூர்:

கரூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள் மற்றும் தமிழ்க்கவிஞர்கள் நாளை முன்னிட்டு கரூர் வட்டாட்சியர் அலுவலக முகப்பில் உள்ள சங்கப் புலவர்களான கருவூர் புலவர்கள் பன்னிருவர் நினைவுத்தூணுக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். மேலும் திருக்குறள் பேரவையின் சார்பாக தமிழ் அறிஞர்களுக்கு பாவேந்தர் பாரதிதாசனின் வெண்பா புனைதல் போட்டி நடத்தப்பட்டது.

இதில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு மாவட்ட கலெக்டர் பரிசுகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா, கரூர் வட்டாட்சியர் (பொ) ரவிகுமார், மேலை பழநியப்பன், தங்கராஜ் , தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.


Tags:    

Similar News