உள்ளூர் செய்திகள் (District)
- மருதுார் அருகே 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம்
- பிரேதத்தை கைப்பற்றி ரயில்வே போலீசார் விசாரணை
கரூர்,
மருதூர் டவுன் பஞ்., வீரம்பூரில் அதிகாலையில் ரயிலில் அடிபட்டு, அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது. தகவல் அறிந்த திருச்சி ரயில்வே போலீசார், சம்பவ இடத்துக்கு வந்து, பெண்ணின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இது குறித்து வழக்குப்பதிவு செய்து, அந்த பெண் யார், எவ்வாறு ரயிலில் அடிபட்டார் என்பது குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.