உள்ளூர் செய்திகள் (District)

குளித்தலை அருகே தொழிலாளி சாவு

Published On 2023-01-22 07:12 GMT   |   Update On 2023-01-22 07:12 GMT
  • குளித்தலை அருகே தொழிலாளி பலியானார்
  • வீட்டு வாசலில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்

குளித்தலை:

குளித்தலை அடுத்த, தோகைமலை அருகேயுள்ள டி.இடையப்பட்டியை சேர்ந்தவர் கண்ணன் (57) இவருக்கு இருதய நோய், சர்க்கரை நோய் மற்றும் வயிற்று வலி என பல்வேறு நோய்களுக்கு ஆளாகி தொடர்ந்து மருந்து, மாத்திரை சாப்பிட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும் நோய் குணமாகாததால் கடந்த, 19-ந்தேதி இரவு, வீட்டு வாசலில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கண்ணன் உயிரி–ழந்தார். இவரது மகன் தாமோ–தரன் கொடுத்த புகார்படி, தோகைமலை, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு–கின்றனர்.


Tags:    

Similar News