உள்ளூர் செய்திகள் (District)

நகை திருடிய வாலிபர் கைது

Published On 2023-05-12 06:28 GMT   |   Update On 2023-05-12 06:28 GMT
  • நகை திருடிய வாலிபர் கைது செய்யபட்டார்
  • பின்னர் சத்தியசீலனை கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை போலீசார் மீட்டனர்.

கரூர்,

கரூர் காளியப்பன்னுாரை சேர்ந்த பழனிசாமி (வயது39) என்பவர் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். செயின் உட்பட தங்க நகைகளை தனது கடைக்கு எடுத்து வந்தார். கடையில் வைத்து விட்டு வியாபாரத்தை மேற்கொண்டுள்ளார். சிறது நேரம் கழித்து பார்த்த போது நகைகளை காணவில்லை. இதையடுத்து கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த சத்தியசீலன் (28) என்பவர் நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் சத்தியசீலனை கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை போலீசார் மீட்டனர்.

Tags:    

Similar News