உள்ளூர் செய்திகள் (District)
இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது
- இருசக்கர வாகனம் திருடிய வாலிபர் கைது செய்யபட்டார்
- இதுகுறித்து சுரேஷன் டவுன் போலீசில் புகார் செய்தார்.
கரூர்,
கரூர் வடக்கு காந்திகிராமம் காலனியை சேர்ந்தவர் சுரேஷன் (வயது 52). கூலி தொழிலாளியான இவர் கரூர் ெரயில்வே ஸ்டேஷன் முன் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது இருசக்கர வாகனத்தை காணவில்லை. இதுகுறித்து சுரேஷன் டவுன் போலீசில் புகார் செய்தார். புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தியதில், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இஸ்மாயில் (28) இருசக்கர வாகனத்தை திருடி சென்றது தெரியவந்தது. பின்னர் இரு சக்கர வாகனத்தை மீட்டு போலீசார் அவரை கைது செய்தனர்.