உள்ளூர் செய்திகள் (District)
தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் மீது வழக்கு
- கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் மீது வழக்கு
- கோபால் (வயது 48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வேலாயு தம்பாளையம்,
கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பல்வேறு வகையான புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய ப்படு வதாக வேலாயுத ம்பாளை யம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெ க்டர் ரமேஷ் தலைமையி லான போலீசார் சம்பந்த ப்பட்ட கடைக்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது தமிழக அரசு தடை செய்யப்பட்டுள்ள புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவற்றை பறிமுதல் செய்த போலீசார் விற்பனை செய்த நொய்யல் குறுக்குச்சாலை பகுதியை சேர்ந்த கோபால் (வயது 48) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.