உள்ளூர் செய்திகள் (District)

சாலை விபத்தில் கூலி தொழிலாளி பலி

Published On 2023-02-15 09:55 GMT   |   Update On 2023-02-15 09:55 GMT
  • கபிலர்மலை கோவிலுக்கு செல்ல மலை அடிவாரம் அருகே சாலையை கடக்க முயன்ற போது அடையாளம் தெரியாத வாகனம், ஆறுமுகத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.
  • அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள குச்சிபாளையத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). கூலித் தொழிலாளி. இவர் கடந்த மாதம் 2-ந் தேதி கபிலர்மலைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள கபிலர்மலை கோவிலுக்கு செல்ல மலை அடிவாரம் அருகே சாலையை கடக்க முயன்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், ஆறுமுகத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆறுமுகம் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, ஆறுமுகத்தை மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News