உள்ளூர் செய்திகள் (District)
- செங்குளத்துப்பட்டியை சேர்ந்த பெண் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார்
- இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்
தேனி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள செங்குளத்துப்பட்டி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சின்னகருப்பன் மனைவி அரசி (வயது56).இவருக்கு கடந்த 2 வருடமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதற்காக சிகிச்சைபெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அரசி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மகன் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்